Read in English
This Article is From Oct 10, 2018

தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட பெண்!

என்னுடைய 32வது பிறந்த நாளில் என்னை நன்றாக பார்த்துக் கொள்ளக் கூடியவரை திருமணம் செய்து கொண்டுள்ளேன் என்று எழுதியுள்ளார்.

Advertisement
விசித்திரம்

32 வயதான லுலு பெற்றோரை சமாதனப்படுத்த தன்னைத் தானேதிருமணம் செய்து கொண்டார்.

லுலு ஜெமிமா 32 வயதான இவரை நீண்ட நாளாக திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தனர். இறுதியாக, பெற்றோரின் கோரிக்கைய ஏற்ற லுலு திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டார். உகாண்டா நாட்டைச் சேர்ந்த லுலு ஆக்ஸ்ஃபோர்டு பல்கழைக்கழகத்தின் மாணவி ஆகஸ்ட் 27ம் தேதி தன்னை தானே திருமணம் செய்து கொண்டார்.

இது குறித்து டெய்லி மெயில் கூறுகையில், உகாண்டாவில் நடைபெற்ற லுலுவின் திருமணத்திற்கு அவரின் பெற்றோர் வரவில்லை. மறுநாள் நாங்கள் லுலுவிடம் பேசிய போது, சற்று குழப்பத்துடனும், மனமுடைந்தும் காணப்பட்டார். தந்தை தன்னிடம் இதுபற்றி எதுவும் பேசவில்லை என்று கூறியுள்ளார்.
 

கோ ஃபண்ட் மீ என்ற பக்கத்தை தனது படிப்பிற்கான கட்டணத்தை சேமிக்க வைத்துள்ளார். அதில் தனது திருமண குறித்த முடிவை பதிவிட்டுள்ளார். எனது தந்தை எனக்கு 16 வயது ஆனபோதே என்னுடைய திருமணத்தில் பேச வேண்டிய உரைய தயார் செய்து விட்டார். சமீபகாலமாக என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் எனக்கு நல்ல கணவர் அமைய வேண்டும் என்று வேண்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனால் என்னை நன்றாக பார்த்துக்கொள்ள கூடியவரை 32 வது திருமணம் செய்துவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

லுலுவின் திருமணத்திற்கான மொத்த செலவு $2.62 மட்டுமே. அதுவும் அவர் பயணத்திற்கு ஆன செலவே. திருமண உடையை பிறந்த நாள் பரிசாக லுலுவிற்கு அவரது தோழி கொடுத்துள்ளார். லுலுவின் சகோதரர் திருமண கேக்கை தயார் செய்து கொடுத்துள்ளார். மேலும் திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் தங்களது பில்லை தாங்களே கொடுத்து விட்டனர்.

Advertisement
Advertisement