বাংলায় পড়ুন Read in English
This Article is From Apr 05, 2019

பீர் பாட்டிலில் சிக்கிய பாம்பை மீட்ட பெண்மனி #வைரல் வீடியோ

தைரியம் எனக்கு எப்படி வந்தது என்றே தெரியவில்லை என அந்த பெண்மனி தெரிவித்தார்

Advertisement
விசித்திரம் Edited by

பிளோரிடாவை சேர்ந்த பெண் தைரியமாக செயல்பட்டார்

ப்ளோரிடாவை சேர்ந்த பெண்ணான ரோசா ஃபாண்ட், பிரூக்ஸ்வைலுக்கு காரில் சென்றுள்ளார். அப்போது, அங்கு ஒரு பீர் பாட்டிலில் பாம்பு சிக்கி தவித்துள்ளது. தன் பயத்தையும் பொருட்ப்படுத்தாமல், அந்த பாம்பை மீட்டார் ரோசா. அதனை பாகஸ் நியூஸ் தெரிவித்தது.

‘பாம்பு என்றால் எனக்கு பயம். ஆனால் அந்த பாம்பு பீர் பாட்டில் குப்பியில் அகப்பட்டு தவித்து வந்தது. மற்ற யாராக இருந்தாலும் அந்த பாம்பு இறக்கட்டும் என விட்டு விடுவார்கள். ஆனால் என்னால் அப்படி போக முடியவில்லை' என்றார் ரோசா.

பாம்பை மீட்பதை தன் செல்போனில் பதிவு செய்த ரோசா. அதனை சமூகவலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார். தற்போது. அந்த வீடியோவை 16,000 பேருக்கு மேல் பார்த்துள்ளனர்.

Advertisement

அந்த வீடியோ:

அந்த தைரியம் எனக்கு எப்படி வந்தது என்றே தெரியவில்லை. அந்த பாம்பு என் கையில் இரண்டு முறை சுற்றியது. இருந்தும் நான் அதனை மீட்டேன்' என ரோசா தெரிவித்தார்.

ரோசாவின் இந்த செயலுக்கு பலர் தங்களின் பாராட்டுக்களைதெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement