This Article is From Dec 28, 2018

ஐதராபாத் விமான நிலையத்தில் தங்க கட்டிகளுடன் சிக்கிய பெண்!

தங்கத்தைக் கொண்டு செல்வதற்கான சரியான ஆவணம் இல்லாததால் சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகளிடம் அப்பெண் ஒப்படைக்கப்பட்டார்.

ஐதராபாத் விமான நிலையத்தில் தங்க கட்டிகளுடன் சிக்கிய பெண்!

சோதனையின் போது அப்பெண்ணின் கைப்பையில் 4 தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Hyderabad:

கடந்த வியாழக்கிழமை அன்று ரூபாய் 9.5 லட்சம் வரை மதிப்புள்ள தங்க கட்டிகளை கடத்த முயன்ற பெண்னை ஐதராபாத் விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் அளித்த தகவல் படி, ஜி. லக்ஷ்மி ‌என்னும் அந்த பெண் விசாகப்பட்டினம் செல்ல இருந்ததாகவும். விமானநிலைய சோதனையில் அப்பெண்ணின் கைப்பையில் 4 தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் தகவல் அளித்தனர்.

மேலும் தங்கத்தைக்  கொண்டு செல்வதற்காக சரியான ஆவணம் இல்லாததால் சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகளிடம் அப்பெண் ஒப்படைக்கப்பட்டார்.

.