This Article is From Jan 03, 2019

சபரிமலை கோவிலுக்குள் சென்ற 2 பெண்களும் மாவோயிஸ்டுகள்: கேரள பாஜக தலைவர்

சபரிமலை கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த பெண்கள் இரண்டு பேரும் மாவோயிஸ்டுகள் என கேரள பாஜக தலைவர் முரளிதரன் கூறியுள்ளார்.

சபரிமலை கோவிலுக்குள் சென்ற 2 பெண்களும் மாவோயிஸ்டுகள்: கேரள பாஜக தலைவர்
New Delhi:


சபரிமலை ஐயப்பன் கோயிலில் 40 வயதுடைய பிந்து மற்றும் கனகதுர்க்கா, இரு பெண்கள் நுழைந்து ஐயப்பனைத் தரிசனம் செய்தனர். இது கேரளாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலை கோவிலுக்கு சென்ற பெண்கள் இருவருமே பக்தர்கள் இல்லை, அவர்கள் இரண்டு பேருமே மாவோயிஸ்டுகள், நக்சல்கள் ஆவர்.

கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு தேர்ந்தெடுக்கப்பட்ட காவல் துறை அதிகாரிகளை கொண்டு அந்த பெண்களை கோவிலுக்கு அழைத்துச சென்றுள்ளனர்.

இது இந்து ஆலயத்திற்கு எதிராக முதல்வர் பினராயி விஜயனின் சிபிஎம் கட்சியுடன்,  மாவோயிஸ்டு தீவிரவாதிகள் திட்டமிட்டு செய்த கூட்டுச்சதியாகும்.

கேரள இந்து ஆலயங்கள் மீது நடத்தப்பட்ட வெளிப்படையான தாக்குதல் இது. கேரளாவுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த நாட்டுக்கும் நேற்று ஒரு கருப்பு தினம் ஆகும் என முரளிதரன் தெரிவித்தார். 

.