1942ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது தெற்கு பசிபிக் கடலில் 14000 அடி உயரத்திலிருந்து போர் விமானம் ஒன்று கடலில் விழுந்தது. இந்த விமானத்தை தேடும் பணியில் அமெரிக்க படைகள் ஈடுபட்டன. சாலமன் தீவுகளுக்கு அருகே இந்த விமானம் தேடப்பட்டது. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் விழுந்த விமானத்தை தேடும் பணி தொடர்ந்து வந்தது.
இந்த தேடுதலுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பால் ஆலன் நிதி வழங்கினார்.
சி.என்.என் தகவல் படி அமெரிக்க, பிரிட்டிஷ், ஜப்பான் படைகள் விமான பாகங்களை சமீபத்தில் கண்டறிந்தன.
அப்போது கண்டறியப்பட்ட பாகங்களை வைத்து ஆழ்கடலில் தேடுதலை நடத்தினர். ரோபோக்களை ஆழ்கடலுக்குள் அனுப்பி தேடினர்.
அமெரிக்க கடற்படை இந்த விமானம் முழுவதும் பழுதடைந்த நிலையில் உள்ளது என அறிவித்தது. ஆனால் அதன் முன் பகுதி இன்னும் அடிப்பகுதில் தேங்கியுள்ளது.
அமெரிக்க கடற்படை 1942ல் போர் விமானங்களை கொண்டு மால்டாவில் தாக்குதல் நடத்தியது. அப்போது கிபராடர் துறைமுகத்தை காக்க வந்த இந்த விமானம் கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது.
இந்த விமானத்தில் இருந்தவர்கள் தப்ப முடியாமல் கடலில் மூழ்கி போனதாக கூறப்படுகிறது.