Beijing, China:
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பால் பலி எண்ணிக்கை 1,483 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ஹூபே மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. நேற்று முன்தினம் தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடு கிடுவென உயர்ந்ததாக சொல்லப்பட்ட நிலையில், இந்த தகவல் வந்துள்ளது.
சீனாவின் மத்திய மாகாண சுகாதார ஆணையம் அளிக்கும் தகவல்படி, கொரோனா வைரஸ் பாதிப்பால் கூடுதலாக 116 பேர் இறந்துள்ளதாகவும் 4,823 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் பாதிப்பால் 242 பேர் இறந்ததாகவும் 14,800 பேர் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படிடருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
COMMENTS
Advertisement