This Article is From Nov 13, 2018

“மத்திய, மாநில அரசுகளையும் யோகா காப்பாற்றும்” - அமைச்சர் சுரேஷ் பிரபு பேச்சு

கோவாவில் நடைபெற்ற யோகா தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சுரேஷ் பிரபு அரசையே யோகா காப்பாற்றி விடும் என்று பேசினார்.

“மத்திய, மாநில அரசுகளையும் யோகா காப்பாற்றும்” - அமைச்சர் சுரேஷ் பிரபு பேச்சு

பல பிரச்னைகளுக்கு தீர்வாக யோகா அமையும் என்று அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.

Panaji:

கோவா தலைநகர் பானாஜியில், யோகா தொடர்பாக 2 நாட்கள் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் சுரேஷ் பிரபு பேசியதாவது-

நீங்கள் யோகாவை தினசரி செய்து வந்தால், யோகாசனம் நோயில் இருந்து நம்மைக் காக்கும். நமது வாழ்க்கையை மேம்படுத்தும். இதனால் நம் குடும்பம் அல்லது அரசுக்கு ஏற்படும் செலவில் இருந்து யோகாசனம் காப்பாற்றும்.

யோகாசனத்தை தினசரி செய்து வருவோர் மருத்துவமனைக்கு அதிகம் செல்ல வேண்டியிருக்காது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், சர்வதேச அளவில் பல்வேறு பிரச்னைகளுக்கு யோகாசனம் ஒரு முக்கிய தீர்வாக அமையும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு பேசினார்.
 

.