বাংলায় পড়ুন Read in English
This Article is From Feb 05, 2019

ஹெலிகாப்டர் தரையிறங்க தடை! - சாலை மார்க்கமாக மேற்குவங்கம் சென்ற யோகி!

பொகாரோவுக்கு ஹெலிகாப்டரில் செல்லும் யோகி ஆதித்யநாத், பின்னர் அங்கிருந்து மேற்குவங்க மாநிலத்தில் உள்ள புருலியாவுக்கு காரில் செல்கிறார்.

Advertisement
இந்தியா ,
Kolkata:

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு மேற்குவங்க அரசு அனுமதி வழங்காததால் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க யோகி ஆதித்யநாத் காரில் சென்றார்.

முன்னதாக, மேற்குவங்க மாநிலத்துள்ள மால்டா மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பங்கேற்பதற்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவருடைய ஹெலிகாப்டர் தினஜ்பூர் பகுதியில் தரையிறங்குவதற்கு அம்மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது.

அதனையடுத்து, அந்த பேரணியில் யோகி ஆதித்யநாத் பங்கேற்க முடியாமல் போனது. அதனையடுத்து, தொலைபேசிமூலம் யோகி ஆதித்யநாத் பேரணியில் பேசினார். இந்தநிலையில், இன்று மீண்டும் மேற்கு வங்க மாநிலத்தின் புருலியா மாவட்டத்தில், நடைபெறும் பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்கவுள்ளார்.

இந்த நிலையில் திட்டமிட்டபடி இன்று பாஜகவின் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மேற்குவங்கம் செல்கிறார். ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பொகாரோவுக்கு ஹெலிகாப்டரில் செல்லும் யோகி ஆதித்யநாத், பின்னர் அங்கிருந்து மேற்குவங்க மாநிலத்தில் உள்ள புருலியாவுக்கு காரில் சென்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

Advertisement


 

Advertisement