This Article is From Mar 19, 2019

‘அதிமுக-வில் இணைஞ்சுட்டேனே வச்சுக்கோங்க!’- நடிகர் கார்த்திக் தடாலடி

நடிகர் கார்த்திக், இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்தார்.

‘அதிமுக-வில் இணைஞ்சுட்டேனே வச்சுக்கோங்க!’- நடிகர் கார்த்திக் தடாலடி

தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலும், 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடக்க உள்ளன.

நடிகர் கார்த்திக், இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘அதிமுக-வுக்கு இந்த முறை பிரசாரம் செய்ய உள்ளேன்' என்று கூறியுள்ளார். 

தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலும், 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடக்க உள்ளன. இந்நிலையில் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் மக்களவைத் தேர்தலுக்கான தங்களது அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இன்று சென்னை, ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தேர்தல் அறிக்கையை செய்தியாளர்கள் முன்னிலையில் வாசித்தார். அதேபோல திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேனாம்பேட்டையில் இருக்கும் அண்ணா அறிவாலயத்தில், தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். 

தேர்தல் அறிக்கைகள் வெளியிட்டப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக இருக்கிறது. இப்படிபட்ட சூழலில் நடிகர் கார்த்திக், அதிமுக-வின் தலைமை நிர்வாகிகளை சந்தித்துப் பேசியுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ‘அதிமுக-வில் நடிகர் கார்த்திக் இணைந்துவிட்டதாக எடுத்துக் கொள்ளலாமா?' எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘அப்படியும் வச்சுக்கோங்க. அதிமுக-வில நான் இணைஞ்சுட்டதாகவே வச்சுக்கோங்க. ஆனால், இந்த முறை நான் பிரசாரம் மட்டுமே செய்ய உள்ளேன்' என்று கூறியுள்ளார். 
 

.