அசாம் மாநில முதல்வர் சார்பானந்தா குறித்து சமூகவலைதளங்களில் வகுப்புவாத கருத்து வெளியிட்டதாக அசாம் மாநில பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோல், திரிபுரா மாநில முதல்வர் பிப்லப் தேவ் குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக பாஜக ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.