தேர்தல் நேரத்தில் ரெய்டு: தேர்தல் ஆணையம் அறிவுரை!

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டு வருகின்றன. அரசுத் துறையினர் மேற்கொள்ளும் இந்த சோதனை, அரசியல் நோக்கம் கொண்டது என்று குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, இந்திய தேர்தல் ஆணையம், அறிவுரை வழங்கியுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘எந்தவித ரெய்டு குறித்தும் தேர்தல் ஆணையத்துக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அரசியல் பாரபட்சமின்றி அது இருந்திட வேண்டும்’ என்று கூறியுள்ளது.

Related Videos