மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத், இந்த முறை பிகாரின் பாட்னா சாகிப் தொகிதியில் இருந்து போட்டியிட உள்ளார். அங்கு சத்தூர்கன் சின்காவிற்கு சீட் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு பதிலாக அமைச்சர் பிரசாத் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, போட்டியிடும் தொகுதிக்குச் சென்ற பிரசாத்திற்கு, சின்கா ஆதரவு பாஜக தொண்டர்கள், கறுப்புக் கொடி காட்டியுள்ளனர்.