ஜெகன்மோகன் ரெட்டி என்டிடிவிக்கு பேட்டி அளிக்கும் போது, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் பெரும்பான்மை வகிக்காது என்றும் பெரும்பாலும் தொங்கு பாராளுமன்றம் அமையவே வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்றும் அதனால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் எந்த ஒரு கட்சியுடனும், தலைவர்களுடனும் கூட்டணி அமைக்கவோ, ஆதரவு அளிக்கவோ தயாராக உள்ளதாக கூறியிருந்தார். முன்னதாக கடந்த ஆண்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்காத காரணத்தினால் மத்தியில் பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. சந்திரபாபு நாயுடு என்டிடிக்கு அளித்த பேட்டியில், பிரதமர் மோடி ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவு அளித்து வருகிறார்.