பாஜக-வுக்கு எதிரான அணியை அமைக்கும் நோக்கில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சென்று சந்தித்துள்ளார். அவர் மேலும், “பாஜக-வுக்கு எதிராக யார் இருந்தாலும், அவர்கள் கை கோர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.