கொல்கத்தாவில், போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும், மருத்துவர்கள் ’தங்களுக்கு நியாம் வேண்டும்’ என குரல் எழுப்பி, போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதைத்தொடர்ந்து, நோயாளிகள் தவிர்த்து, மற்றவர்கள் யாரும் மருத்துவமனை வளாகத்தில் இருக்க அனுமதிக்க கூடாது என போலீசாருக்கு மம்தா வலியுறுத்தினார்.