இன்று இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார் மோடி. கடந்த முறை போலவே, இம்முறையும் வெளிநாட்டுத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என அனைவரையும் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளனர் என கூறப்படுகிறது. இந்நிலையில் பதவியேற்புக்கு முன்பாக தேசிய போர் நினைவிடத்தில் தன் மரியாதையை செலுத்துனார் மோடி.